மாதவரம்: கொடுங்கையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ மற்றும் அதிமுகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கொடுங்கையூர் காமராஜர் சாலையின் இரு இருபுறமும் அனுமதி பெறாமல் அதிமுக மற்றும் தேமுதிக கட்சி கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன. இதுகுறித்து பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுபாதேவி சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் கேட்டபோது, உரிய பதிலளிக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுபா தேவி கொடுங்கையூர் காவல் நிலையத்தில், உரிய அனுமதி பெறாமல் கட்சிக்கொடிகளை வைத்த அதிமுகவினர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆர்.கே.நகர் அதிமுக துணை செயலாளர் சண்முக விநாயகம் உள்ளிட்டோர் மீது கொடுங்கையூர் போலீசார் தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post தேர்தல் விதி மீறல் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.